அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொருட்களின் விலைகளை உடன் குறைக்கக் கோரியும் ஹட்டன் மணிக்கூட்டு சந்தியில் பெண்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றை இன்று (18) முன்னெடுத்தனர்.
உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.