Our Feeds


Saturday, September 3, 2022

Anonymous

கோடீஸ்வரர்களை வரியிலிருந்து தப்பிக்க உதவிய 600 அதிகாரிகள் - பட்டியலை கையிலெடுத்தது CID



கோடீஸ்வர வர்த்தகர்கள் மற்றும் நலன்விரும்பிகளை வரி வலையில் இருந்து தப்பிப்பதற்கு சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் 600க்கும் மேற்பட்டோர் உதவியுள்ளனர் என்று, புலனாய்வுப் பிரிவினால் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட விசேட புலனாய்வு அறிக்கையின் மூலம் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், இந்த மோசடி அதிகாரிகள் தொடர்பான மேலதிக விபரங்களை வழங்குமாறு புலனாய்வுத் துறைக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை சுங்கம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இடம்பெறும் பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகளினால் வருடாந்தம் அறவிடக்கூடிய பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான வரியை அரசாங்கம் இழந்து வருவதாக விசேட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »