எரிபொருள் விலைச் சூத்திரம் அமுல்படுத்தப்பட்டால் உலகச் சந்தையிலுள்ள விலைகளுக்கேற்ப ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மக்கள் நெருக்கடியான நிலையில் இருக்கும் போது இந்த எரிபொருள் சலுகையை வழங்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலைச் சூத்திரத்தின் பிரகாரம் செயற்படுவதாக அரசாங்கம் கூறியுள்ள போதிலும் வரி செலுத்தியதன் பின்னர் தற்போது ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபா இலாபம் அரசாங்கத்துக்குக் கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.