Our Feeds


Tuesday, September 27, 2022

SHAHNI RAMEES

வவுணதீவு பொலிஸார் கொலை சம்பவம் : 4 பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கி உத்தரவு


 மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி N.M.M.அப்துல்லா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, நான்கு பிரதிவாதிகளும் தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »