Our Feeds


Thursday, September 8, 2022

Anonymous

வியட்நாம் களியாட்ட விடுதியில் பாரிய தீ : 32 பேர் பலி



வியட்நாமின் களியாட்ட விடுதியொன்றில் பரவிய பாரிய தீயினால் குறைந்தபட்சம் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.


வியட்நாமின் தென்பகுதியில் ஹோ சி மின் சிற்றிக்கு அருகில் செவ்வாய் இரவு இச்சம்பவம் இடம்பெற்றது.

கட்டடத்தின் மேல் மாடியில் தீ பரவிய நிலையில், வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் கட்டடத்தில் சிக்கிக் கொண்டனர்.

இறந்தவர்களில் 17 ஆண்களும் 15 பெண்களும் அடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மற்றும் 3 ஆம் ஆம் மாடியிகளின் ஜன்னல்களுக்கு ஊடாக நால்வர் வெளியே பாய்ந்தனர். அவர்கள் காயமடைந்த போதிலும் உயிர்தப்பியுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »