Our Feeds


Tuesday, September 27, 2022

Anonymous

2 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலைய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி கைது!


சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் எடையுள்ள 8 தங்க பிஸ்கட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயற்சித்த கட்டுநாயக்க விமான நிலைய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


இன்று (27) காலை துபாயிலிருந்து வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு பயணிகள் முனையத்தில் பாதுகாப்புக் கடமையிலிருந்த குறித்த அதிகாரியிடம் தங்க பிஸ்கட்டுகளை வழங்கியிருக்கலாம் என சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.


விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி தனது காற்சட்டைப் பையில் தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்து விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள சுங்க வளாகத்தை கடக்க முற்பட்டபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »