முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர்களால், 10 மில்லியன் ரூபாய் நீர் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
குறித்த நிலுவைத் தொகையினை பெற்றுக்கொள்வதற்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள், பொது நிர்வாக அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் கட்டணத்தினை செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சபாநாயகர் நேரடியாக கலந்துரையாடியுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு மாதங்கள் வரை கால அவகாசம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீர் கட்டணத்தினை செலுத்த தவறும் பட்சத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அத்துடன் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலங்களில் வசிக்கும் அரச அதிகாரிகளிடமிருந்தும் செலுத்தப்படாத நிலுவை நீர்க்கட்டணங்களை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.