Our Feeds


Sunday, September 4, 2022

SHAHNI RAMEES

நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து பலி..!

 

பதுளை – ஹல்துமுல்ல , உடவெரிய பிரதேசத்தில் நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடவெரிய – சன்வெளி பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சிவை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த இரு இளைஞர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழச்துள்ளார்.



உயிரிழந்தவர் 24 வயதுடைய வெலமிடியாவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞராவார். ஹல்துமுல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நேற்று (03) நீர்வீழ்ச்சிக்கு அருகில் சுமார் 200 அடி பள்ளத்திலிருந்து இளைஞனரிக் சடலத்தை மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »