Our Feeds


Thursday, September 8, 2022

Anonymous

பாதுக்கவில் 14 வயதான சிறுமி 5 இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு!



பாதுக்க, பின்னவல பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 5 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் நிலைய பொறுப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமி சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக பாதுக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி நேற்று (07) பாதுக்க பொலிஸில் சம்பவம் தொடர்பில் சிறுமியும் அவரது தாயும் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமியின் வாக்குமூலத்தின்படி சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 5 இளைஞர்களிடம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 19, 20, 22 மற்றும் 27 வயதுடையவர்கள். துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் வயது 14 என பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »