இலங்கைக்கு, மியன்மார் 170 மில்லியன் ரூபா பெறுமதியான 1000 மெற்றிக் தொன் வெள்ளை அரிசியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
அந்த நாட்டுக்கு நியமிக்கப்பட்ட புதிய இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவின் வேண்டுகோளின் பிரகாரம் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரிசித்தொகை இந்த மாத இறுதியில் நாட்டை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.