Our Feeds


Wednesday, August 24, 2022

SHAHNI RAMEES

X-Press பேர்ள் கப்பல் விவகாரம் - கடலை சுத்தப்படுத்த 90 கோடி ரூபா ஒதுக்கீடு..!

 

இலங்கையின் கடற்பரப்பில் கடந்தாண்டு தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு 90 கோடியே 37 இலட்சத்து 57,293 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவுப் பொருட்கள் மன்னாரில் இருந்து ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையான கடற்பரப்பில் பரவியதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சமுத்திரபாதுகாப்பு சம்மந்தமான நடவடிக்கைகளை எடுக்கும்போது, அதற்கான சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்று, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சட்ட ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்கு, நீதியமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து துரிதமான நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »