டொயோட்டா நிறுவனத்தின் இலங்கை அங்கிகாரம் பெற்ற முகவர் நிறுவனமான டொயோட்டா லங்கா (தனியார்) நிறுவனம், வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
டொயோட்டா Corolla 121, 141 மற்றும் Yaris வகை கார்களின் உரிமையாளர்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டொயோட்டா Corolla மற்றும் Yaris வகை கார்களின் முன் இருக்க பகுதியில் உள்ள Air Bag (பாதுகாப்பு பை) இலவசமாக மாற்றுவது தொடர்பான திட்டத்தை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. மேலும் திட்டத்தை வெற்றிகரமாக செய்துமுடிக்க அந்தந்த வாகனங்களின் உரிமையாளர்களின் ஆதரவை நிறுவனம் கோரியுள்ளது.
இது தொடர்பான மேலதிகத் தகவல்களை உள்ளடக்கிய பொது அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.