Our Feeds


Friday, August 26, 2022

SHAHNI RAMEES

PHOTOS: எரிபொருளுக்கு தட்டுப்பாடா? அம்பாறையில் மீண்டும் உருவான எரிபொருள் வரிசை!



அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது

மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (25) இரவு முதல் எரிபொருள் பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகைத் தந்ததை காண முடிந்தது.


கடந்த காலங்களில் QR முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடீரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் மக்கள் கடந்த காலங்களில் எரிபொருள் நிலையத்தை சூழ ஒன்று கூடியவாறு நிற்பதையும் அதிகளவான வாகனங்கள் எரிபொருள் நிலையங்களை நாடி செல்வதையும் காண முடிகின்றது.


மேலும், நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.


பாறுக் ஷிஹான்










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »