Our Feeds


Monday, August 22, 2022

Anonymous

கொழும்பு, கோட்டை OIC உட்பட 20 பேர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு!

 



கொழும்பு - கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 அதிகாரிகள் இன்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டனர்.


அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ருஹுணு பல்கலைகழக்தின் மாணவ சங்கத் தலைவர் புஸ்பிக எரந்த கைது செய்யப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், இலங்கை ஆசிரிய சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் மேலும் சில அமைப்புகளின் அங்கத்தவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »