Our Feeds


Monday, August 15, 2022

SHAHNI RAMEES

BREAKING: தடிகளால் தாக்கி நபரொருவர் கொலை..!

 


கொஸ்மோதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரம்பகெட்டிய பிரதேசத்தில் ஒருவர் தடிகளால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த நபர் கடந்த நேற்றிரவு (14) கொஸ்மோதரபகுதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த நிலையில், குறித்த நிகழ்வில் பங்கேற்ற சிலருடன் பணத் தகராறு ஏற்பட்ட நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் குறித்த நபர் அவ்வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

நிகழ்வு நடைபெற்ற வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் அடிப்படையில் இந்தக் கொலை நடந்ததா? என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

உயிரிழந்த நபர் பண மோசடி போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளவர் என்றும் இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் கொஸ்மோதர பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »