Our Feeds


Friday, August 12, 2022

SHAHNI RAMEES

#BREAKING: பாதிரியார் ஜீவந்த பீரிஸூக்கு பிணை..!



சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த

பாதிரியார் ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.


எனினும் இந்தக் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, அருட்தந்தை ஜீவந்த பீரிஸை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.


இதனிடையே, அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதவான், நாளை பொலிஸாரிடம் சென்று வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிட்டார்.



மேலும், குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »