Our Feeds


Tuesday, August 16, 2022

SHAHNI RAMEES

கோட்டா தாய்லாந்து சென்ற விமானத்துக்கு பணம் செலுத்திய இலங்கை அரசு..!

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேக ஜெட் விமானம் மூலம் தாய்லாந்தின் பெங்கொக்கிற்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில், இதற்கான பணம் இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, ஆம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டரீதியான சில சலுகைகள் உள்ளன.

முன்னாள் ஜனாதிபதியும், அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மறைவுக்கு பின்னர் அவரது மனைவிக்கு அத்தகைய வரப்பிரசாதங்கள் தற்போது கிடைக்கப்பெறுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »