உலகளாவிய ரீதியிலுள்ள நாடுகளில் பணிபுரியும் புலம் பெயர் இலங்கை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக நல்லெண்ண தூதுவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நியமித்துள்ளதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்கள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிமன்னிப்பின் கீழ் இன்று (26) வெள்ளிக்கிழமை ரஞ்சன் ராமநாயக்க விடுதலையானதையடுத்து , குறித்த நியமனக் கடிதத்தை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு , அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பில் அவர் இட்டுள்ள டுவிட்டர் பதிவில் , ‘ நான் ராமநாயக்கா விடுதலையானதும் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர் நலன்களை உலகளவில் மேம்படுத்துவதற்காக நல்லெண்ண தூதுவர் பதவியை வழங்க முன்வந்தேன்.
அவர் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
இது வெளிநாட்டு வேலைவாய்ப்பில் அவரது மறைமுக அறிவைப் பயன்படுத்துவதற்கான ஒரு தன்னார்வ நிலையாகும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.