தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கும் இடையே அவசர சந்திப்பொன்று சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசனுடன், அரசியல் குழு உறுப்பினர் எம். உதயகுமார் எம்.பி, பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்
மேலும் அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததது.
பயனுள்ள இந்த சந்திப்பில் இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாத தடை சட்டம், தமிழர் தேசிய பிரச்சினைகள், தேசிய அரசாங்கம்,தேசிய பொருளாதார நெருக்கடி, புலம் பெயர்ந்த தமிழர் விவகாரம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதித்துவம் செய்யும் பெருந்தோட்ட மக்கள் பிரச்சினைகள் ஆகியவை தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டன என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.