Our Feeds


Friday, August 26, 2022

SHAHNI RAMEES

போராட்டக்காரர்களால் நட்சத்திர விடுதியாக மாறும் ஜனாதிபதி மாளிகை..! - காரணம் என்ன..?

 

கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை உயர் ரக நட்சத்திர விடுதியாக மாற்றுவதற்கு கலந்துரையாடப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மாளிகையை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் கடந்த ஜுலை மாதம் 9 ம் திகதி கைப்பற்றியிருந்தனர்.

இதையடுத்து, அதிவுயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் பல்வேறு பாதுகாப்பு ரகசியங்களை மக்கள் அறிந்து கொண்டனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி ஒருவர் இனிவரும் காலத்தில் அங்கு தங்குவது, அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என கருதப்படுகிறது.

இதையடுத்து, குறித்த மாளிகையை சுற்றுலா விடுதி அல்லது உயர் ரக நட்சத்திர விடுதி அல்லது வெளிநாட்டு ராஜதந்திர உயர் மட்ட அதிகாரிகள் தங்குவதற்கான இடமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »