Our Feeds


Sunday, August 14, 2022

SHAHNI RAMEES

அரசாங்கத்திற்கு பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியும்..!

 

அரசாங்கம் தலையிட்டு மாவு, முட்டை மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்தி குறைத்தால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை பெருமளவு குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், பேக்கரி உற்பத்தியாளர்கள் தமது தொழிலை தொடர முடியாத நிலைமைக்கு வந்துள்ளனர்.

இப்போது ஒரு முட்டை 65 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவின் விலை ஒவ்வொரு நாளும் சீராக ஏறிக்கொண்டிருக்கிறது. வெண்ணெயின் சந்தை விலை நிச்சயமாக எங்களால் எட்ட முடியாததாக இருக்கிறது. இந்தியாவில் முட்டை ஒன்றின் விலை 18 ரூபாவாகும்.

அரசு அவற்றை இறக்குமதி செய்தால் பாணின் விலையை 30 முதல் 50 ரூபா வரை குறைக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »