Our Feeds


Tuesday, August 23, 2022

Anonymous

கம்பஹாவில் அரசியல்வாதி ஒருவரின் உறவினர் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது!

 

 


(க.கிஷாந்தன்)


வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து உயிரிழந்தார் எனக் கூறப்படும் மலையக சிறுமியின் உடலம், மஸ்கெலியா, மொக்கா தோட்டத்திலுள்ள பொது மயானத்தில் நேற்று (22) அடக்கம் செய்யப்பட்டது.

மஸ்கெலியா, மொக்கா கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள 16 வயதான ரமணி என்ற சிறுமி ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

அரசியல்வாதி ஒருவரின் உறவினருக்குச் சொந்தமான  கம்பஹாவில் உள்ள வீட்டிலேயே பணி புரிந்துள்ளார்.

சுமார் 6 மாதங்கள் வரை அங்கு வேலை செய்து வந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து மூச்சு திணறல் ஏற்பட்டதாலேயே மரணித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.


நன்றி: MetroNews

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »