குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அருகில் உள்ள ஹோட்டல் முன் காத்திருந்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த நபர் குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குளியாபிட்டிய தண்டகமுவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.