லாஃப் கேஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3,000 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் இன்று (16) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.
துறைமுகத்தில் அமைந்துள்ள லாஃப் எரிவாயு கொள்கலன் களஞ்சியத்தில் இந்த எரிவாயு நிரப்பப்படவுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பணிகள் நிறைவுற்றதும் விநியோகப் பணிகள் ஆரம்பமாகும் என அதிகாரி தெரிவித்தார்.