Our Feeds


Tuesday, August 23, 2022

SHAHNI RAMEES

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வரும் பணிநீக்கம்..!




முச்சக்கரவண்டியில் சென்று தங்க சங்கிலி மற்றும்

தொலைபேசி, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் கைதான நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.


நுகேகொடைக்கு பொறுப்பான மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஊடாக உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நால்வரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


மாலபே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் 3 கான்ஸ்டபிள் ஆகியோரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »