பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து துணைவேந்தர்களுடன் எதிர்வரும் திங்கட்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களும் விரைவில் திறக்க எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.