சலுகைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஆனால் நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.