Our Feeds


Tuesday, August 23, 2022

SHAHNI RAMEES

யாழ்ப்பாண பல்கலைகழக விஞ்ஞானபீட மாணவர்கள் இருவருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது!



யாழ்ப்பாண பல்கலைகழக விஞ்ஞான பீட

மாணவர்கள் இருவருக்கு மறுஅறிவித்தல் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.


விஞ்ஞான பீடத்தை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை கடந்த 2ஆம் திகதி பல்கலைகழக நுழைவாயிலுக்கு அருகில் வைத்து, சிரேஷ்ட மாணவர்கள் இருவர் தாக்கினார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை பல்கலைகழக நிர்வாகம் முன்னெடுத்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு மாணவர்களுக்கும் மறுஅறிவித்தல் வரையில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் இரு மாணவர்களும் பல்கலைகழக வளாகத்தினுள்ளோ , விடுதிக்குள்ளோ உட்பிரவேசிக்கவும் தடை விதிக்கப்ட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »