Our Feeds


Wednesday, August 24, 2022

Anonymous

கப்பல் கப்பலாக கொழும்புக்கு வரும் பெட்ரோல், டீசல், சுப்பர் டீசல் & ஒட்டோ டீசல் - அமைச்சர் தகவல்.

 




30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசலுடன் கொழும்பு வந்தடைந்த கப்பலிலிருந்து எரிபொருள் இறக்கும் பணிகள் இன்று (24) ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அமைச்சர் டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், மசகு எண்ணெய்யை ஏற்றிய இரண்டாவது கப்பல் நேற்று (23) இலங்கையை வந்தடைந்ததாகவும் விஜேசேகரவின் ட்விட்டர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஓட்டோ டீசல் ஏற்றிய கப்பலொன்றும், 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் 92 ஒக்டேய்ன் பெற்றோலுடன் கப்பலொன்றும் இலங்கைக்கு வரவுள்ளது.

இது தவிர மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விநியோகம் கடந்த 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »