Our Feeds


Sunday, August 14, 2022

SHAHNI RAMEES

குறுகிய அரசியல் நோக்கங்களை யோசிக்காமல் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் – தயாசிறி

 

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சேவைகளில் ஈடுபடாமல் அனைவரும் ஒன்றிணைந்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு ஊடகங்களிடம் கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய சபை என்ற அடிப்படையில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் எவ்வாறு நாட்டை முன்னெடுத்து செல்வது தொடர்பாக கலந்துரையாடவேண்டும்.

ஏனெனில், பதவிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் இல்லை.

இதற்கு எதிரானவர்கள் இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் சுயலாபம் மற்றும் குறுகிய அரசியல் நோக்கங்களை யோசிக்காமல் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »