சீர்குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் கடினமான பணியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே எதிர்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை அவருக்கு தலைவலியை ஏற்படுத்தும் செயலாகவே இருக்கும் என்று இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிடுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கு சில காலங்கள் எடுக்கலாம்.
இதற்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் வெவ்வேறு பக்கங்களில் இழுத்துக்கொண்டிருக்கின்றன.
இதன்போது இரண்டு பாரிய நாடுகளுக்கு இடையில் கொழும்பு இறுக்கமான கயிறு நடையை நடத்துகிறது.
இதனையெல்லாம் ரணில் விக்கிரமசிங்க சமாளித்துக் கொண்டிருக்கும் போது போதாக்குறைக்கு கோட்டாபயவும் நாடு திரும்புகிறார்.
கோட்டாபயவுக்காக ரணில் விக்கிரமசிங்க என்ன செய்தாலும் விமர்சிக்கப்படுவார்.
பொதுமக்களில் பெரும்பாலானோர் விக்கிரமசிங்கவை கோட்டாவின் ஆளாகவே கருதுகின்றனர்.
எனவே விக்கிரமசிங்க துக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அவர் ஒரு புத்திசாலி அரசியல்வாதி மற்றும் இந்த தந்திரமான பிரச்சினையை துணிச்சலுடன் சமாளிப்பார் என்று இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.