சுமார் 3.8 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது இலங்கையர்கள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டனர்.
20 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த ஒன்பது பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள் அவர்கள் மலவாயிலில் மறைத்து வைத்திருந்த 7.304 கிலோ எடையுடைய தங்கங்களை கைப்பற்றினர்.
ஒவ்வொருவரும் சுமார் 450-700 கிராம் தங்கத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
எனினும் தனித்தனியாக கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாவை தாண்டாததால் விசாரணைக்கு ஒத்துழைக்க அறிவித்தல் அனுப்பிய பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.