Our Feeds


Sunday, August 14, 2022

SHAHNI RAMEES

சர்வகட்சி அரசாங்கம் அமையும்- நீதி அமைச்சர் நம்பிக்கை...!




சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு

ஏதேனும் அரசியல் கட்சி எதிர்ப்பு தெரிவித்தால், அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகளுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விஜேதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.


சர்வ கட்சி ஆட்சிக்கு எதேனும் அரசியல் கட்சி எதிர்ப்பு தெரிவித்தால், எங்களுக்கு வேறு வழியில்லை, சேர விரும்பும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம். இது அனைத்துக் கட்சியாக இல்லாமலும் இருக்கலாம், ஆனால் பல கட்சிகளின் ஆதரவைப் பெற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும் தொடர்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »