Our Feeds


Saturday, August 13, 2022

SHAHNI RAMEES

சர்ச்சைக்குரிய சீனக் கப்பலுக்கு நங்கூரமிட துறைமுக மாஸ்டருக்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி..!

 


சர்ச்சைக்குரிய சீனக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்க துறைமுக மாஸ்டருக்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

யுவான் வாங்-5, சீன விண்வெளி, ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் துணைபுரியும் உயர்தர ஆன்டெனாக்கள் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் கூடிய அதிநவீன கப்பலானது, சமீபத்திய நாட்களில் தீவிர இராஜதந்திரப் பேச்சுக்கு உட்பட்டது.

இந்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »