Our Feeds


Friday, August 12, 2022

SHAHNI RAMEES

மக்களின் பேஸ்புக் கணக்குகளை பின்தொடரும் பொலிஸார்- மனோ கணேசன் எம்.பி.

 



கொழும்பில் தற்போது வாழும் மக்களின்

பேஸ்புக் கணக்குகளை பின்தொடர்ந்து போராட்டத்திற்கு ஆதரவாக செயட்பட்டவர்களை பிடிப்பதே தற்போது பொலிஸாரின் வேலையாக இருக்கிறது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும், ஜனாதிபதி மாளிகை ஆக்கிரமிக்கப்பட்ட போது, பொலிஸ் சீருடையில் உடற்பயிற்சி கூடத்தைப் பயன்படுத்தியதைக் காணமுடிந்தது.


இவற்றைப் பார்த்த பொதுமக்களும் மிருகக்காட்சிசாலையைப் பார்ப்பது போல் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றதாக தெரிவித்துள்ள அவர், பொது மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என பொலிஸாரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »