அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா தங்காலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி குடாவெல்ல பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.