Our Feeds


Tuesday, August 23, 2022

SHAHNI RAMEES

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இம்மாதம் நாடு திரும்பமாட்டார்..!

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்வரும் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் இலங்கை திரும்புவார் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.



தாய்லாந்தில் தங்கியுள்ள அவர், நாளை (24) இலங்கை திரும்புவார் என முன்னதாக தெரிவித்திருந்த போதிலும், குறித்த பயணம் சுமார் இரண்டு வாரங்கள் தாமதமாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »