Our Feeds


Monday, August 22, 2022

SHAHNI RAMEES

மே 9 வன்முறை சம்பவங்கள்; சு.கவின் முக்கியஸ்தர் கைது.!

 

மே 09ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பிலியந்தலயிலும் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நகரசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெஸ்பேவ நகரசபையின் சுதந்திரக் கட்சி உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலயில் இடம்பெற்ற 6 வன்முறைச் சம்பவங்களுடன் சந்தேகநபருக்கு தொடர்பிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கெஸ்பேவ மேயர் லக்ஷமன் பெரேராவின் வீட்டைத் தாக்கி சேதம் விளைவித்தமை, அவரது சகோதரியின் வீட்டைத் தாக்கியமை, காமினி லொக்குகே எம்.பியின் சகோதரரின் வீட்டைத் தாக்கியமை உள்ளிட்ட 6 வன்முறைச் சம்பவங்களுடன் சந்தேகநபருக்கு தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »