மே 09ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பிலியந்தலயிலும் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நகரசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஸ்பேவ நகரசபையின் சுதந்திரக் கட்சி உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலயில் இடம்பெற்ற 6 வன்முறைச் சம்பவங்களுடன் சந்தேகநபருக்கு தொடர்பிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கெஸ்பேவ மேயர் லக்ஷமன் பெரேராவின் வீட்டைத் தாக்கி சேதம் விளைவித்தமை, அவரது சகோதரியின் வீட்டைத் தாக்கியமை, காமினி லொக்குகே எம்.பியின் சகோதரரின் வீட்டைத் தாக்கியமை உள்ளிட்ட 6 வன்முறைச் சம்பவங்களுடன் சந்தேகநபருக்கு தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.