Our Feeds


Thursday, August 25, 2022

SHAHNI RAMEES

நாட்டில் 60 இலட்சம் பேர் முதலாவது பூஸ்டர் தடுப்பூசியை பெறவில்லை..!

 

கொரோனாவுக்கு எதிரான முதலாவது பூஸ்டர் தடுப்பூசியை பெறாத சுமார் 60 இலட்சம் பேர் இன்னும் நாட்டில் இருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் தலைவர் மருத்துவர் சமித்த கினிகே தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா தொற்று அபாயத்தை கருத்திற்கொண்டு பெற வேண்டிய தடுப்பூசிகளை உடனடியாக எடுத்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »