Our Feeds


Monday, August 15, 2022

SHAHNI RAMEES

கடந்த 3 ஆம் திகதி காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு..!

 

நுவரெலியா கிரிகோரி ஏரிக்கு நீர் பாயும் தலகலஓயாவில் இருந்து காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பம்பரகெலே தோட்டத்தை சேர்ந்த சுந்தரலிங்கம் சசிதரன் (20) என்பவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தலகலஓயாவில் சடலத்தை பார்த்த விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சொந்தமான உல்லாச விடுதி ஊழியர் ஒருவர் இந்த சடலம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன், பம்பரகெலே பிரதேசத்தில் அமைந்துள்ள எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்திற்கு அருகில் மதுபோதையில் வீட்டுக்கு செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »