நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பழுதடைந்துள்ள முதலாவது மின் பிறப்பாக்கியின் திருத்தப்பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 14 - 16 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றைய மின்வெட்டு ஒரு மணித்தியாலம் இருபது நிமிடங்களுக்கு அமுல்படுத்தப்படும் எனவும், நாளை (16) முதல் மின்வெட்டை நீடிக்க வேண்டியுள்ளதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (15) காலை ஏற்பட்ட பழுதடைந்தமையினால், நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின்விநியோகத்திற்கு முழுமையான பங்களிப்பு செய்யமுடியாமல் போயுள்ளது.