Our Feeds


Monday, July 18, 2022

Anonymous

முஸ்லிம், தமிழ் கட்சிகளின் ஆதரவை பெற நேரடியாக களமிறங்கினார் ரனில் - SJB யை கவனிக்க ஹரீன், மனுஷ

 



புதிய ஜனாதிபதி தெரிவு எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பத்து உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இது தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீனமாகச் செயற்படும் உறுப்பினர்கள் மற்றும் தமிழ், முஸ்லிம் எம்.பி.க்கள் ஆகியோரின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையை பதில் ஜனாதிபதியை ரணில் விக்கிரமசிங்கவே நேரடியாக நடத்துவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »