ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மதத்துடன் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு அழைப்பு விடுத்தால் ஜனாதிபதியாக பதவியேற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்பி இன்று (14) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்குமாறு பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து தமக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடு எதிர்பார்க்கும் முற்போக்கான அரசியல் வேலைத்திட்டத்துக்கு தமக்கு ஆதரவளிக்குமாறு பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்பிக்கள் உட்பட பலரும் தன்னைக் கேட்டுக் கொண்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.