முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ மற்றும் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்டோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் நாளை இடம்பெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாளை வரை நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என குறித்த மூவரும் சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றுக்கு உறுதியளித்துள்ளனர்.