அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 18ம் திகதி முதல் 20ம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருள் நெருக்கடி தொடர்ந்து காணப்படுவதன் காரணமாக போக்குவரத்து வசதிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஜூலை 21ஆம் திகதி வியாழக்கிழமை கல்விச் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.