நாளை (22) நள்ளிரவு முதல் புகையிரத கட்டணங்கள் திருத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, பயணிகள், சரக்கு போக்குவரத்து போன்றவற்றுக்கான ரயில் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் கட்டண திருத்தத்தின்படி, ரயில் கட்டணம் பஸ் கட்டணத்தில் பாதியாக இருக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.