Our Feeds


Saturday, July 16, 2022

Anonymous

BREAKING: ரனில் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - கோட்டா கோ கம, ரனில் கோ கம என பெயர் மாற்றம் - போராட்டக்காரர்கள் அதிரடி

 



மக்கள் ஆதரவு இல்லாத ரணில் விக்கிரமசிங்க பதவியை விட்டு வெளியேறும் வரை காலிமுகத்திடல் போராட்ட மைதானத்தை விட்டு செயற்பாட்டாளர்கள் வெளியேறமாட்டார்கள் எனவும் அவருக்கு அந்தப் பதவியில் இருக்க உரிமையில்லை எனவும் போராட்ட களத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுத் தாக்கலின்போது ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளக் கூடாது எனவும் அவ்வாறு வழங்கினால் நாடு முழுவதும் மீண்டும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதமராக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தமை வேடிக்கையானது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க போன்ற ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் நிலைப்பாடு மாறவில்லை எனவும், பதில் ஜனாதிபதி பதவி விலகும் வரை அச்சமின்றி போராடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காலிமுகத்திடல் கோட்டா கோ கமவின் பெயரை ரணில் கோ கம என மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »