தான் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமையால் அரசியலமைப்புக்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜக்பக்ஷ பதவி விலகல் தொடர்பில் தனக்கு அறிவித்துள்ள காலக்கெடு இன்று (13) இரவு 12.00 மணி வரை உள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.