வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு மாற்று முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, நேற்று (16) அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர தொழில்நுட்ப முறை எதிர்வரும் சில நாட்களில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் வர்த்தக பதிவு இலக்கத்தை உள்ளடக்குவதற்கும் இதன்போது சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.