கொவிட்-19 புதிய மாற்றத்துடன் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் அணிவது தொடர்பில் சுகாதார அமைச்சு முன்னைய தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறைந்த பட்சம் கொரோனா அபாயம் அதிகம் உள்ள பகுதிகளிலாவது கட்டாயம் முகக் கவசம் அணிவது குறித்து அதிகாரிகளின் கவனம் செலுத்த வேண்டும் என சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
உலகில் பல நாடுகள் கொவிட் 19 தொடர்பில் சாதகமான முடிவுகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், இலங்கை அது தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.